search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் ஆப்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டுமென ஜானகிராமுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது.
    • கடன் கொடுத்தவர்கள் மிரட்டத் தொடங்கினர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜானகிராம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெணுமூரூ, அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராம். (வயது 30). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ஜானகிராம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். ஆன்லைன் விளையாட்டுக்காக தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கினார்.

    மேலும் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கினார். ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டுமென ஜானகிராமுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது.

    மேலும் கடன் கொடுத்தவர்கள் மிரட்டத் தொடங்கினர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜானகிராம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜானகிராம் உடலை மீட்டு அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை பறிமுதல் செய்தனர்.

    அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை அம்மா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக எழுதியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என தொடர்ந்து செல்போனில் மிரட்டி வந்தனர்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரிகிருஷ்ணா நேற்று தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பினார்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த நாயுடு பேட்டையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா (வயது 32). இவருக்கு ரஜிதா என்ற மனைவியும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ஹரி கிருஷ்ணா சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். பின்னர் சாப்ட்வேர் நிறுவனம் ஹரி கிருஷ்ணாவை வேலையிலிருந்து நீக்கி விட்டனர். இதனால் வருவாய் இன்றி குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்ட ஹரி கிருஷ்ணா ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கினார்.

    அவருக்கு வருவாய் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என தொடர்ந்து செல்போனில் மிரட்டி வந்தனர். அதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரிகிருஷ்ணா நேற்று தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பினார்.

    அதில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதால் தனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். குழந்தையை நன்றாக பார்த்துக்கொள். தந்தை இல்லாத குழந்தை எவ்வளவு சிரமப்படும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் குழந்தையை நன்றாக கவனித்துக்கொள் என தகவல் அனுப்பி இருந்தார்.

    இதையடுத்து நாயுடு பேட்டை அருகே உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்ற ஹரிகிருஷ்ணா அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் ஹரி கிருஷ்ணா பிணத்தை மீட்டு அவரது சட்டை பையில் இருந்து கடிதத்தை கைப்பற்றினர். தனது தாய் தந்தைக்கு ஹரிகிருஷ்ணா கடிதம் எழுதி இருந்ததார். உங்களைப் பிரிந்து செல்வது எனக்கு மனவேதனையாக உள்ளது. என் மனைவியும் மகளையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் என கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றவர்கள் ஆந்திராவில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவதால் ஆன்லைன் கடன் வழங்கும் ஆப்பை தடை செய்ய வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×